ஆரத்தி சகா (Arati Saha)

         Reason for today's google logo


ஆரத்தி சகா (Arati Saha) ( 24 செப்டம்பர் 1940 - 23 ஆகஸ்ட் 1994) இவர் ஓர் இந்திய நீண்ட தூர நீச்சல் வீரர் ஆவார். 1959 செப்டம்பர் 29 அன்று ஆங்கிலக் கால்வாயில் நீந்திய முதல் ஆசிய பெண்மணி என்ற பெருமைக்குரியவர். 1960 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பிரித்தானிய இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் பிறந்த இவர் நான்கு வயதிலேயே நீச்சலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரது முன்கூட்டிய திறமை இந்திய முன்னாள் நீச்சல் வீரரால் சச்சின் நாக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இவர் ஏஸ் இந்திய நீச்சல் வீரர் மிகிர் சென் என்பவரால் ஆங்கிலக் கணவாயைக் கடக்க முயன்றார். இவரது 80வது பிறந்தநாளில் கூகுள் டூடுலில் இவரை இடம்பெறச் செய்தது. 

1999இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் ஆரத்தி

 பிறப்பு : 24 செப்டம்பர் 1940, கொல்கத்தா,              வங்காளம், பிரித்தானிய இந்தியா

இறப்பு : 23 ஆகஸ்ட் 1994 ( வயது 53)

கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா

தேசியம் : இந்தியன்

பணி : நீச்சல் வீரர்

விருதுகள் : பத்மசிறீ (1960)




Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்

100 மில்லியன் ஆண்டுகள் பழமையான விந்து இதுவரை கண்டிராத பழமையானது.

IPL schedule - 2020